×

டெங்கு வராமல் தடுக்க மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்

திருத்துறைப்பூண்டி, நவ.12: திருத்துறைப்பூண்டி நகரதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று நான்காம் கட்டமாக புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆட்டூர் ரோடு, ரயிலடி, அரியலூர் கிராமம் ஆகியபகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல், வாந்தி போன்ற கொடிய நோய்கள்பரவாமல் இருப்பதற்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்டமக்கள் நிலவேம்பு கசாயம் குடித்து பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கு மாவட்டதலைவர் முகம்மது மிஸ்கீன் தலைமைவகித்தார்.மாவட்டமாணவரனி செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் கிளை நிர்வாகிகள்வினியோகித்தனர்.


Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து