தூத்துக்குடி, நவ.8:தூத்துக்குடியில் ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் விடுத்த செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களினால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையோரப் பகுதிகளில் காணப்படும் பலரது ஆக்கிரமிப்பின் காரணமாக பொதுமக்கள் நடப்பதற்குக்கூட போதுமான இடவசதியின்றி சாலையின் மையப் பகுதியினை பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் தேவையற்ற விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னையினை ஒழுங்குபடுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறையாக அறிவிப்பு அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டது.