ஏரல், நவ.8: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைக்கவும், ஆறு, குளம், ஏரி மற்றும் வாய்க்கால்களை சுத்தமாக வைத்திடவும், விவசாயம் செழித்து மக்கள் ஆரோக்கியமாக வாழ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐயப்ப ரத ஜோதியினை வழிபடுவதற்காக நாடு முழுவதும் தர்ம பிரசார ரதயாத்திரை நடந்து வருகிறது. உமரிக்காட்டிற்கு வந்த யாத்திரைக்கு கிராம விவசாய சங்க தலைவர் நடேசன் மலப்பழம் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் சிவகுமார், கனிராஜ், ஜெயமுருகன், பொன்ராஜ், மணிகண்டன், காசிவேல், வேல்முருகன் மற்றும் ஊர்மக்கள் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ரதத்தில் இருந்த ஐயப்ப ஜோதியை அகல் விளக்கில் பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர். நிகழ்ச்சியில் ஐயப்ப சேவா சமாஜம் மாநில செயலாளர் பாவநாசம், தூத்துக்குடி மாவட்ட மண்டல பொறுப்பாளர் துரைராஜா இளந்துழகன் பங்கேற்றனர்.