திருச்சி, நவ.8: திருச்சியில் மாவட்ட ஓய்வூதியர் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கியுள்ள பி.பி.ஓ புத்தகத்தில் துணைவருடன் வாரிசுகளின் விவரங்களையும் பதிவு செய்து திருத்திய பி.பி.ஓவை மாநில கணக்காயர் வழங்க வழிவகை செய்ய அரசு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக துணைத்தலைவர் ராசப்பா வரவேற்றார். இணைச்செயலாளர் நன்றி கூறினார்.