மூதாட்டியிடம் செயின் பறிப்பு

திருச்சி, நவ.8: ரங்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி நாகலட்சுமி(63). இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்புறம் பைக்கில் வந்த 2 பேர் நாகலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: