திருச்சி, நவ. 8: திருச்சி கோட்டை சிந்தாமணி ஓடத்துறையை சேர்ந்தவர் ரெங்கராஜ்(40), ஆட்ேடா டிரைவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரெங்கராஜ், ஆட்டோவை எடுத்துக்கொண்டு ஓடத்துறை சர்வீஸ் சாலைக்கு வந்தார். அங்கு ஆட்டோவை நிறுத்தி வைத்து அதில் தான் அணிந்திருந்த செருப்பையும் வைத்துவிட்டு மாயமானார்.