ரிஷிவந்தியம், நவ. 7: ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மீனா (24). கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் ரமேஷ் (24) என்பவர் காதலித்து ஏமாற்றியதாக, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். அதன்பேரில், கடந்த ஜூன் 18ம்தேதி ரமேஷ் மற்றும் மீனா தரப்பினரை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து ரமேஷ்-மீனாவுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.அதன்பின் மண்டகப்பாடி கிராமத்தில் உள்ள மீனா வீட்டில் ரமேஷ் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 27ம் தேதி ரிஷிவந்தியம் செல்வதாகக் கூறி, மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், ரிஷிவந்தியத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காணாமல் போய் விட்டார்.