சேலம், அக்.23: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் இனிப்பு கடைகள், திருமண மண்டபங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள இனிப்பு கடைகள், கார வகைகள் தயாரிக்கும் பணியில் இனிப்பு கடை உரிமையாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இனிப்பு, கார வகைகள் கலப்படம் இல்லமால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தில் உணவு பாதுகாப்புதுறை சார்பில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள இனிப்பு கடைகளிலும், இனிப்பு தயாரிக்கும் கூடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.