சாலை விபத்தில் வாலிபர் பலி

மண்ணச்சநல்லூர், அக்.23: மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் மாரிமுத்து(20). இவரது நண்பர் ஷேக் அப்துல்லா. இருவரும் நேற்று திருச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் மண்ணச்சநல்லூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை மாரிமுத்து ஓட்டிச் சென்றார். நேற்றிரவு 9.30 மணியளவில் பைக் உத்தமர்கோவில் மேம்பாலத்தில் சென்றபோது திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து புத்தனாம்பட்டி சென்ற அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த கொள்ளிடம் டோல்கேட் போலீசார் இருவரையும் ரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மாரிமுத்து இறந்தார். காயமடைந்த ஷேக்அப்துல்லா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: