×

தனியார் துறையினரின் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் 25ம்தேதி நடக்கிறது

பெரம்பலூர், அக். 23: பெரம்பலூரில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25ம்தேதி நடக்கிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார்த்துறை நிறுவனங்களும், தனியார்த் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாரத்திற்கான தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25ம்தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார்த்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்த்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளவதால் இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள் ளலாம். எனவே இப்பணி யிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வரும் 25ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் நடைபெறவு ள்ள தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள் ளார்.

Tags : employment camp ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி