சோமனூர், அக்.23: சோமனூர் அடுத்த கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் துறையும், ராயல்கேர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் கேபிஆர் கல்லூரியின் தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசுகையில், உணவுப் பழக்கவழக்கங்கள், போதிய உடற் பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் போன்றவற்றால் இந்த நோய் பெருகி வரும் காலகட்டத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிச்சயம் அவசியம் என்றார். ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் வகித்து பேசுகையில், மேலை நாடுகளில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அதற்கான பரிசோதனை முறைகளும் அதிகளவில் உள்ளது.