ஈரோடு, அக். 23: அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை கோயிலுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தை அங்குள்ள செல்லாண்டியம்மன் கோயில் பயன்பாட்டிற்காக மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் பெருந்துறை தாலுகா கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிக்கு சொந்தமான நிலத்தை கோயிலுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தகது.