ஈரோடு, அக். 23: ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கிராமிய போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்கள், இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 6, 8, 9, 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் 24ம் தேதி காலை 10 மணிக்கு பாட்டு, கிராமிய நடனம் மற்றும் பரதநாட்டிய போட்டிகள், மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டியும் நடக்கவுள்ளது.