ஈரோடு, அக். 23: ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி. தலைமையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி நெருங்கும் நிலையில் பயணிகள் அதிகளவில் ரயில்களில் பயணித்து வருகின்றனர். பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை ரயிலில் கொண்டு செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர், ரயில் பயணிகளிடம் பணம், நகை, பொருட்களை திருடி செல்கின்றனர். இதைத்தடுக்கும் வகையில் ரயில் நிலையங்கள், ரயில்களில் ரயில்வே போலீசார், பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பயணிகளின் உடமைகளை சோதனை செய்வது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை விசாரிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று ரயில்வே டிஎஸ்பி (கோவை) அண்ணாதுரை ஈரோடு ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: