அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி பலி

திண்டிவனம், அக். 23:

திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமம் நடுத்

தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி பொட்டுக்கண்ணி (55). இவர் நேற்று தனது பசு மாட்டை மேய்க்க வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது அங்கு மின்வயர் அறுந்து கிடந்தது. அவ்வழியாக வந்த பொட்டுக்கண்ணி இதனை கவனிக்காமல் மின்வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவர் ஓட்டிவந்த பசுமாடும் மின்சாரம் தாக்கி இறந்தது. தகவல் அறிந்து வந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: