திருவாரூர், அக்.23: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் நேற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.