கழுகுமலையில் வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

கழுகுமலை, அக். 23:  கழுகுமலை  விநாயகர் காலனியை சேர்ந்தவர் குருநாதன் (44). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று  மதியம் தனது வீட்டில் உணவருந்திவிட்டு கழுகுமலை பிள்ளையார் கோயில் பஸ்நிலையத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம்  தெரியாத வாகனம், குருநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில்,  அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்துசென்ற கழுகுமலை இன்ஸ்பெக்டர்  முத்துலட்சுமி மற்றும் போலீசார், குருநாதன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குருநாதனுக்கு லட்சுமி என்ற மனைவியும்,  அனிதா(18) என்ற மகளும், கார்த்திக்(15) என்ற மகனும் உள்ளனர்.

Related Stories: