கழுகுமலை, அக். 23: கழுகுமலை விநாயகர் காலனியை சேர்ந்தவர் குருநாதன் (44). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மதியம் தனது வீட்டில் உணவருந்திவிட்டு கழுகுமலை பிள்ளையார் கோயில் பஸ்நிலையத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், குருநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.