திருவொற்றியூர்: மாதவரம் தோட்டக்கலை சார்பில், தீபாவளியை மாசில்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதவரம் பால்பண்ணை உள்ள தோட்டக்கலை பூங்காவில் விதைப்பந்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, களிமண்ணில் செய்யப்பட்ட ஊசி வெடி, சரவெடி, மத்தாப்பு, ராக்கெட், சங்கு சக்கரம் மற்றும் லட்சுமி வெடி போன்ற தோற்றங்களை வடிவமைத்து அதில் உரங்கள் மற்றும் கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய், பூசணிக்காய் உட்பட காய்கறிகளின் விதைகள் மற்றும் பூக்களின் விதைகளை வைத்துள்ளனர்.