சென்னை: கார்கள் உரசியது தொடர்பாக நடந்த சண்டையை தடுக்க முயன்ற போது, போக்குவரத்து உதவி ஆய்வாளரும், ஐடி நிறுவன ஊழியரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை போக்குவரத்து பிரிவு எஸ்ஐ குமார் (52). இவர், ேநற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை செனடாப் முதல் தெரு சந்திப்பில் பணியில் இருந்தார். அப்போது, 56 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்த காரும், ஐடி ஊழியர் வெற்றிவேல் முருகன் (32) என்பவர் ஓட்டி வந்த காரும் உரசிக்கொண்டன. இருவரும் சாலையிலேயே கார்களை நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே சண்டையை நிறுத்தி, போக்குவரத்தை சரிசெய்ய எஸ்ஐ குமார் அங்கு சென்றார். இதையடுத்து 56 வயது மதிக்கத்தக்க நபர் தனது காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். ஆனால், ஐடி ஊழியரான வெற்றிவேல்முருகன் காரை எடுக்காமல் போக்குவரத்து எஸ்ஐயிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.