கீழ்ப்பாக்கம்: டி.பி.சத்திரம், கே.வி.என் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் மைதிலி (40), இவரது கணவர் கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்து வந்தார். மைதிலி, ஒரு சாமியாரை சந்தித்து, தனது கணவரின் நிலை குறித்து கூறினார். அதற்கு அந்த சாமியார், உனது குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் யாரோ சூனியம் வைத்துள்ளனர். சூனிய தகடு உன் வீட்டின் உள்ளே 20 அடி தூரத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அதை வெளியில் எடுத்து தீயில் கொளுத்தினால் தான் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். அதை உண்மை என்று நம்பிய மைதிலி, தகடை எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டுள்ளார். அதற்கு சாமியார், ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டார். அதற்கு மைதிலி சம்மதித்துள்ளார். பின்பு வீட்டில் 4 கூலி ஆட்கள் உதவியுடன் தகடை எடுக்க குழி தோண்ட ஆரம்பித்தார்.