மின் பராமரிப்பு காரணமாக மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி, அக்.18: மின் பராமரிப்பு காரணமாக திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.எனவே, ரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலட்சுமி நகர், நேருஜிநகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம். ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தநகர், ஜே.கே நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலைய பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைபட்டிபுதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை (19ம் தேதி) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 20ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: