மணல் கடத்திய 7 லாரிகள் பறிமுதல்

மண்ணச்சநல்லூர், அக்.18: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் நேற்றிரவு லால்குடி டிஎஸ்பி ராஜசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற 7 லாரிகளை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 7 மணல் லாரிகளை பறிமுதல் செய்து சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். லாரி ஓட்டி வந்த டிரைவர்கள் உள்பட 14 பேரை வழக்குப்பதிந்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

Related Stories: