சாத்தூர், அக்.18: சாத்தூர் அருகே மூடித்தலை கிராமத்தில் அப்துல்கலாம் பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சாத்தூர் அருகே மூடித்தலை கிராமத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் சாத்தூர் பிளக் விக்னேஷ் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் குருபாதம், செயலாளர் வீரபுத்திரன் கலந்துகொண்டனர். மூடித்தலை கிராமம் முழுவதும் சுமார் 100 மரக்கன்றுகளை நட்டனர்.