அவனியாபுரம், அக். 18:துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணியிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து நேற்றிரவு மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்பாட்சா மகன் சர்புதின் (39) என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டார். அவரை பின் தொடர்ந்த அதிகாரிகள் அவரை வெளியே அனுப்பினர்.