நத்தம், அக். 18: நத்தம் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயர் சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பக்தர்கள் அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மாலைகளை காணிக்கை செலுத்தியும், விளக்கேற்றியும் தரிசனம் செய்தனர். முன்னதாக விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதேபோல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியிலும் பக்தர்கள் வழிபாடு
செய்தனர்.