பாபநாசம் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு

பாபநாசம், அக். 18: பாபநாசம் அருகே மணல் கடத்தி வந்த மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. அபபோது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் நாகரத்தினம் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து மினி லாரியை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: