காவலர்கள் குடும்பத்துக்கு நிதி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தரமணி காவலர் ப.பிரபு, சென்னை காவல் பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜோ.ஆரோக்கியநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரா.பார்த்தசாரதி ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். இவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 25 காவலர்கள் விபத்திலும், உடல் நலக்குறைவிலும் இறந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories: