×

3 பேர் மீது வழக்குபதிவு போலி ஆவணம் தயாரித்து ₹ 1 கோடி மோசடி

நாகர்கோவில், அக். 18:   நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் செயல்படும் தனியார் நிதிநிறுவன கிளை மேலாளர் மணவாளன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: ராமவர்மபுரத்தில் உள்ள தனியார் நிதிநிறுவன கிளை மேலாளராக உள்ளேன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் தன்னிடம் பல வாகனங்கள்  உள்ளன என கூறி, எங்கள் நிதிநிறுவனத்தில் இருந்து ₹ 1 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரத்து 769 கடனாக பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு தெரிந்த பாலசுப்பிமணியன், முருகேசன் ஆகியோர் கையெழுத்துபோட்டு தந்தனர். ஆனால் சத்தியசீலன் பணத்தை திரும்ப செலுத்தவில்லை.  இது தொடர்பாக அவர் கொடுத்த வண்டியின் ஆவணங்களை கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்தபோது அது போலி என தெரியவந்தது. மேலும் பல நிறுவனங்களில் சத்தியசீலன் வாகனங்களின் ஆவணங்களை வைத்து கடன்பெற்று இருப்பது தெரியவந்தது.  இதன்அடிப்படையில் எங்கள் நிறுவனத்தில் போலி ஆவணங்கள் வைத்து பணம் பெற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ₹ 1 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரத்து 769யை பெற்றுதரவேண்டும்.   இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.  அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சத்தியசீலன் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...