விழுப்புரம், அக். 18: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ெதாடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே நேற்று முன்தினம் தொடங்கியது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவுமுதல் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்தநிலையில் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யும் என வானிலைமையம் அறிவித்திருந்தது. கடந்த வாரம் கோடையின் தாக்கத்தைப்போலவே வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது வடகிழக்குபருவமழை பெய்யதொடங்கி பூமியை குளிர்வித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.