விழுப்புரம், அக். 18: இனிப்பு, பலகார கடைகளில் கலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து இனிப்பு, பேக்கரி, பலகார உடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிப்பு, பலகாரம் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான எண்ணெய், நெய், சர்க்கரை, வெல்லம், மாவுப்பொருட்கள் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யுமிடங்களை சுத்தமாகவும், ஈக்கள், பூச்சிகள் மொய்க்கா வண்ணம் வைத்திருக்கவேண்டும்.