அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி முருகன், செல்வராஜ், துவாக்குடி நகர செயலாளர் எஸ்பி.பாண்டியன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருக்குறுங்குடி பேரூராட்சி கட்டளை, ஆவரந்தலை, வட்டக்குளம், நம்பித்தோப்பு, சன்னதி தெரு, தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று அதிமுக அரசின் சாதனைகளை கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.