தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது

தூத்துக்குடி, அக். 18:  தூத்துக்குடி   ராம்ஜிநகரை சேர்ந்தவர் மரியசூசை(20). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்  தினம் இரவு வடக்கு கடற்கரை சாலை நேரு பூங்கா அருகே நடந்து வந்து  கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த இன்பராஜ் என்ற  இம்மானுவேல் (47) என்பவர், மரியசூசையை மறித்து பணம் கேட்டு  மிரட்டினார். அத்துடன் பணம்தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்து  தாக்கினாராம். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த வடபாகம் எஸ்ஐ பிரேம்குமார், இன்பராஜை கைதுசெய்தனர். கைதான இன்பராஜ் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்  தூத்துக்குடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.  மற்றொரு சம்பவம்: இதே போல தூத்துக்குடியை  ஜேஜேநகரை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜெபச்சந்திரன் என்பவர்  டேவிஸ்புரம்  ஜங்சனில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த சிலோன் காலனியை சேர்ந்த ராமன் மகன்  டைட்டஸ் (19) என்பவர்,  பணம்  கேட்டு மிரட்டியதோடு தர மறுத்த ஜெபச்சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.  புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் போலீசார் டைட்டசை கைதுசெய்தனர்.

Related Stories: