தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பொறுப்பாளர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (18ம் தேதி) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
இம்முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461- 2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.