தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்குள்ள உப்பளத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவர், முதல் மனைவியை பிரிந்து 2வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனிடையே இவருக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த 5 வயதிலான பெண் குழந்தையிடம் இரவு நேரங்களில் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து 2வது மனைவி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைதுசெய்தனர்.