தூத்துக்குடியில் பெற்ற குழந்தையிடம் சில்மிஷம்

தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்குள்ள உப்பளத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவர், முதல் மனைவியை  பிரிந்து 2வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனிடையே இவருக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த 5  வயதிலான பெண் குழந்தையிடம் இரவு  நேரங்களில் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து  2வது மனைவி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைதுசெய்தனர்.

Related Stories: