தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடியில் மனித உரிமைகள் கழகம் சார்பில் நடந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் அமைக்கப்ப்டட மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, கொடியேற்று விழா வி.வி.டி. சிக்னல் அருகிலுள்ள மைதானத்தில் நலத்திட்டம் வழங்கும் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரும், வர்த்தக அணி மாநில செயலாளருமான ஜெபசிங் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டாக்டர் ஆனந்தி குத்துவிளக்கு ஏற்றினார். மத்திய மாவட்டச் செயலாளர் வினோத்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அஸ்வின் துரை வரவேற்றனர். கிழக்கு மாவட்டச் செயலாளர் அருண் காமராஜ் விழா ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தார். இதில் மனித உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன், 3 ஆயிரம் பேருக்கு இலவச வேஷ்டி, சேலை, நோட்டுபுத்தகம் என ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.