வித்யாசாகர் கல்லூரியில் உலக உணவு தினம்

உடுமலை, அக். 18: உலக உணவு தினம் உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் (அக்.16) கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலர் பத்மாவதி முன்னிலை வகித்தார்.  கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் இப்ராகிம்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் உணவு கலப்படத்தை எளிதில் கண்டறிவது பற்றி செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பல்வேறு உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

Related Stories: