விஷம் குடித்து முதியவர் தற்கொலை

ஈரோடு, அக்.18:சத்தி கோணமூலை அண்ணாநகரை சேர்ந்தவர் திம்மநாயக்கர் (80). இவரது மகன் பழனிச்சாமி. இவர், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பழனிச்சாமிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தனது மகன் உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த தந்தை திம்மநாயக்கர் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.  இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Related Stories: