ஈரோடு, அக்.18:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் மீண்டும் அரங்கேற துவங்கி உள்ளதால் தீவிர ரோந்து செல்ல போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயின் வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வந்தது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்து வந்ததையடுத்து போலீசாரின் தீவிர ரோந்து, கண்காணிப்பு காரணமாக கட்டுக்குள் வந்தது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேற துவங்கி உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் கொடுமுடி, முள்ளாம்பரப்பு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.