மருந்து விற்பனையாளரை மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு

மொடக்குறிச்சி, அக்.18:சேலம் மாவட்டம், மல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி ஜானகி (34). இவர், ஆயுர்வேத மருந்து விற்பனை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஈரோட்டில் இருந்து அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்ட ஒருவர், ஆயுர்வேத மருந்து வேண்டும் எனவும், அந்த மருந்தை ஈரோடு அருகே உள்ள சோலார் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஜானகி, மருந்துகளை எடுத்துக் கொண்டு சேலத்தில் இருந்து பஸ்சில் ஈரோடு வந்தார். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் தொலைபேசியில் அழைத்தவர், தனது பைக்கில் சோலார் அடுத்த பரிசல்துறை அருகே அழைத்து வந்து கொண்டிருந்தபோது கொக்கராயன்பேட்டை செல்லும் வழியில் திடீரென பைக்கை நிறுத்தி ஜானகியை மிரட்டி அவரிடமிருந்து 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஜானகி அளித்த புகாரின்பேரில், மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: