கொப்பரை தேங்காய் ஏலம் 2 நாள் ரத்து

ஈரோடு, அக். 18: ஈரோட்டில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ம் தேதி மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ள இரு ஏலமும் ரத்து செய்யப்பட்டு, விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏலம் நவ.,2ம் தேதி வழக்கம்போல் நடைபெறும். அன்றைய ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தங்களது கொப்பரை தேங்காயை கொண்டு வரலாம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: