×

புதுகையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.17: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (18ம்தேதி) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்