கும்பகோணம், அக். 17: மழைநீரை சேமிக்கும் வகையில் வாய்க்கால், ஏரி, குளங்களை தூர்வார வேண்டுமென ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கும்பகோணத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட கிளை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் முஹம்மது ஜாகீர் தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ருத்ராபதி, மாவட்ட செயலாளர் நடராஜன், பொருளாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். வட்ட கிளை துணைத்தலைவர் அம்பிகா வரவேற்றார்.