×

சேரம்பாடியில் மக்கள் குறைதீர் முகாம்

பந்தலூர், அக்.17:  பந்தலூர் அருகே சேரம்பாடியில் வருவாய் துறை சார்பில் மனுநீதி நாள் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தலைமை வகித்தார் கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இம்முகாமில் முதியோர் உதவித்தொகை, சாதி சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டம் உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை துறை ரீதியான அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் மாவட்ட வழங்கள் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, தேவாலா டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உள்ளி அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர் இதில் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Overcrowding Camp ,
× RELATED அத்தியூரில் நாளை மக்கள் குறைதீர் முகாம்