ஊட்டி, அக்.17: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊட்டியில் காவலர் வீர வணக்க நாள் பேரணி நடந்தது. நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊட்டியில் காவலர் வீர வணக்க நாள் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு டவுன் டி.எஸ்.பி., (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
ரயில் நிலைய வளாகத்தில் துவங்கிய பேரணியில் ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து போலீசார், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆட்டோ ஒட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணி லோயர் பஜார் சாலை, மார்க்கெட், கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் சிக்னல் அருகே நிறைவடைந்தது. இதில் இன்ஸ்பெக்டர் விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.