துறையூர் அருகே குடிநீர் வழங்க கோரி மக்கள் சாலை மறியல்

துறையூர், அக்.17: துறையூர் அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மதுராபுரி ஊராட்சியை சேர்ந்தது தேவாங்கு நகர். தேவாங்கு நகர் மேற்கு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள வீடுகளில் குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. பொதுவான இடத்தில் தற்காலிகமாக பைப் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இது குறித்து துறையூர் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேரந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் நேற்று துறையூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குருநாதன் சம்பவ இடம் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவில் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறையூர்-திருச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: