மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டி வென்றவர்களுக்கு பரிசு

திருச்சி, அக்.17: திருச்சி பேட்மின்டன் அசோசியேசன் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டிகளை திருச்சி அண்ணா நகரில் நடத்தியது.போட்டிகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். போட்டிகள் 10,13,15,17,19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 29 பிரிவுகளில் 4 நாட்கள் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோகுல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கோகுல், செல்வகணபதி, பெண்கள் இரட்டையர் பிரிவில் பிரதீபா, சிவரஞ்சனி ஆகியோர் சாம்பியன் பட்டங்களை வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரங்கம் டிஎஸ்பி ராமச்சந்திரன், தொழிலதிபர்கள் ராஜா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Related Stories: