திருச்சி, அக். 17: திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படையில் தற்போது 42 ஆண் ஊர்க்காவல் படையினரும், 2 பெண் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 44 காலி பணி இடங்கள் உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி அல்லாதோர் வயது 18 முதல் 45 வயதிற்குள்ளும், உயரம் ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 155 செ.மீ. இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது.