மேட்டுப்பாளையம்,அக்.17: தமிழக கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி மல்லீஸ்வரர் மலைப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை மன்னார்காடு வனத்துறையினர் அழித்தனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மல்லீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் கஞ்சா செடிகள் பயிர் செய்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மன்னார்காடு சரக வன அலுவலர் சுனில்குமார் உத்தரவின் பேரில் வனத்துறை ரேஞ்சர்கள் வீரேந்திர குமார் மற்றும் சுஜிதா ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மலையின் தென்மேற்கு பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது.