×

அலுவலக உதவியாளர் பணிக்கு அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, அக்.17:  தொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு அக்.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்களை  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து “இணை இயக்குனர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், 13, கந்தப்ப வீதி, கைக்கோளன் தோட்டம், ஈரோடு - 638001” என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு