×

பிரசவத்துக்கு சென்ற இளம் பெண்ணுக்கு 108ல் ‘குவா குவா’

திருச்சுழி, அக். 17: திருச்சுழி அருகே, செம்பொன்நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு யோகேஷ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக கருத்தரித்த சசிகலா நரிக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சசிகலாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சசிகலாவை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் பிரசவ வலி அதிகரிக்கவே, ஆம்புலன்ஸிலெயே சசிகலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில், சசிகலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயையும், சேயையும்  திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மழை பெய்தபோதும் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய 108 ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...